ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு எதிராக பாடலாசிரியர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆர்யாவுக்கு ஏற்ற மணப்பெண்ணைத் தேர்ந்தெடுப்பதுதான் எங்க வீட்டு மாப்பிள்ளை. இந்த நிகழ்ச்சிக்கு அவ்வப்போது எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.
இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில், இன்று ஆர்யா தான் மணக்கவிருக்கு பெண்ணை தெரிவு செய்யவிருக்கிறார்.
இந்நிலையில், பாடலாசிரியர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், 8 வயது சிறுமியைக்கூட விட்டுவைக்காமல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்துவரும் நிலையில், ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியில், பெண்களை இவ்வளவு இழிவாகக் காட்டுவது அத்துமீறல்.
ஆர்யாவைத் திருமணம் செய்து கொள்வதற்காக மட்டுமே அந்தப் பெண்கள் பிறந்ததுபோல் நிகழ்ச்சி உள்ளது. தமிழ்ப் பெண்களுக்கு நிச்சயம் இதைவிட அதிகமான மாண்பு இருக்கிறது என நினைக்கிறேன். தயவுசெய்து பெண்களை இழிவுபடுத்துவதை நிறுத்துங்கள்” என பதிவிட்டுள்ளார்.
Enga Veetu Maapillai..Seriously?— Vivek Lyricist (@Lyricist_Vivek) April 15, 2018
At times wen women(even an 8yr old) r taken 4 granted, showing der attitude in such poor light s atrocious
They r shown as if marrying Mr Arya is y dey wer born for
I m sure our tamil girls hav more dignity than dat
Stop Exploitation 4 Gods sake
http://news.lankasri.com/india/03/176648?ref=ls_d_india
No comments:
Post a Comment