Monday, April 30, 2018

திருமதி ராஜேஸ்வரி ராசய்யா லியோன் (மலர்) மரண அறிவித்தல்!

இறப்பு : 28 ஏப்ரல் 2018

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி ராசய்யா லியோன் அவர்கள் 28-04-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாஸ்டியன்பிள்ளை நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சவரிமுத்து ராசய்யா லியோன் அவர்களின் அன்பு மனைவியும்,
இன்பராஜ் லியோன், ரஞ்சித் லியோன், யோகராஜ் லியோன், இதயராஜ் லியோன், காலஞ்சென்ற உதயராஜ் லியோன் மற்றும் செல்வகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற அருட்சகோதரி பெனெடிக்டா, சூசய்யா பாஸ்டியன்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிலா, மரியன், ஷ்யாமளா, வென்சுலா, செல்வராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஞ்சு, சோனியா, சஞ்சய், ஆடம், சுருதி, ரேஷிகா, ப்ரிமல், ஜான், சுபிக்‌ஷ, சுனெக்‌ஷ ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 01/05/2018, 10:00 மு.ப — 06:00 பி.ப
முகவரி:A.F Raymond Ltd 'Reymond House' No 115, D.S Senanayaka Mawatha, Colombo- 8
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 02/05/2018, 10:00 மு.ப — 04:00 பி.ப
முகவரி:A.F Raymond Ltd 'Reymond House' No 115, D.S Senanayaka Mawatha, Colombo- 8
நல்லடக்கம்
திகதி:புதன்கிழமை 02/05/2018
முகவரி:Borella General Cemetery, Colombo
தொடர்புகளுக்கு
இன்பராஜ் லியோன் — சவுதி அரேபியா
தொலைபேசி:+966502315767
ரஞ்சித் லியோன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94766868686
இதயராஜ் லியோன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94773002550
யோகராஜ் லியோன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94775277884
செல்வகுமாரி செல்வராஜ் — இலங்கை
செல்லிடப்பேசி:+94771381104
http://www.kallarai.com/ta/obituary-20180428218000.html?ref=tamilwin

பிரபல புலம்பெயர் தொழிலதிபரின் தாயார் காலமானார்


புலம்பெயர் தமிழர்களது வெற்றியின் அடையாளம் என்று குறிப்பிடப்படுகின்ற லிபரா நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான பிரபல தொழிலதிபர் ரஞ்சித் லியோன் அவர்களின் தாயார் இன்று காலமானார்.
இன்று சனிக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 6.30 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார் என உறவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் மிகப் பெரிய வியாபார வலையமைப்பை உருவாக்கி, மேற்குலக வியாபார நிறுவனங்கள் பலவற்றை பின்னுக்குத் தள்ளி, தொலைத்தொடர்பு வியாபார உலகில் மிகப்பெரிய சாதனை படைத்து ஈழத் தமிழருக்குப் பெருமை சேர்த்தவர் ரஞ்சித் லியோன் அவர்கள்.

தனது வெற்றியின் பின்னணியில் இருந்த பெண் என்று திரு.லியோன் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு நபர்தான் அவரது தாயாரான திருமதி ராஜேஸ்வரி (மலர்) இராசய்யா லியோன் அவர்கள்.
இளவயதில் தனது கணவனை இழந்த நிலையில், தனி ஒரு பெண்ணாக நின்று உழைத்து, ரஞ்சித் லியோனையும் அவரது சகோதர சகோதரியையும் கல்வியிலும், வியாபாரத்திலும் முன்னேற்றிய அந்த தாயார், இன்று பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிச்சயம் ஒரு சிறந்த முனனுதாரணமாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

http://www.tamilwin.com/statements/01/181229?ref=rightsidebar

No comments:

Post a Comment