Friday, April 27, 2018

உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தணுமா? இதை மட்டும் செய்யுங்க


உடலில் உள்ள உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்க ரத்தம் மிகவும் உதவிகரமாக உள்ளது.
இப்படிப்பட்ட ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டியது முக்கியமாகும். இயற்கையான முறையிலேயே நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிக்கலாம்.
  • செம்பருத்தி பூவின் இதழ்களை நன்றாகச் சுத்தம் செய்து, காய வைத்து பொடி செய்து அதை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 1 கிளாஸ் வெந்நீரில் 1 ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
  • பீட்ரூட்டை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது உடலில் புத்தம் புதிய ரத்தம் உற்பத்தியாகும். மேலும் பீட்ரூட்டை நறுக்கிப் பச்சையாக எலுமிச்சைப்பழ சாற்றில் கலந்து சாப்பிட்டால் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.
  • முருங்கை இலைகளில் இரும்பு மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ளது. எனவே இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை இருப்பவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் உற்பத்தியாகும்.
  • முருங்கை இலை சாறுடன் பால் கலந்து கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்குக் கொடுத்தால், ரத்தம் சுத்தம் அடைவதுடன், எலும்புகள் வலிமையடையும்.
  • இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து குடித்தாலோ அல்லது தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தாலோ ரத்தம் சுத்தமாகும். ஆனால் வாத நோய் உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது.

No comments:

Post a Comment