Monday, March 19, 2018

பல பெண்களுடன் உலாவரும் இளைஞர்... கொந்தளிப்பை ஏற்படுத்தும் வைரல் புகைப்படம்


காதல் என்ற பெயரில் நிகழும் தவறுகள், குற்றங்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஆண்கள் பெண்களை ஏமாற்றுவதும், பெண்கள் ஆண்களை ஏமாற்றுவதும் சாதாரணமாகிவிட்டது.
ஆனால் இதனால் ஏற்படும் பின்விளைவுகள் மிகவும் மோசமாகவே உள்ளது. உயிரை எடுப்பதும், தற்கொலை செய்வதும் என தவறான முடிவுகளை தேடுகின்றனர்.
தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தொகுப்பு வைரலாகி வருகிறது. இதில் இருக்கும் நபர் சுமார் பத்து பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்றும், ஒரு புகைப்படத்தில் சில பொலிசாருடன் செல்பி எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதனை அவதானித்த சமூகவலைத்தளவாசிகள் குறித்த பெண்கள் காதல் என்ற பெயரில் இவ்வாறு ஏமாறுவதையும், குறித்த நபரை மிகவும் சரமாரியாகவும் திட்டி வருகின்றனர். பொலிசாருடன் இருக்கும் புகைப்படத்தினை அவதானித்து வேலியே பயிரை மேய்வதற்கு உடந்தையாக இருக்கிறது என்றும் தனது கொந்தளிப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்புகைப்படத்தின் உண்மை விபரம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












http://www.manithan.com/living/04/165565?ref=ls_d_manithan

No comments:

Post a Comment