Monday, March 19, 2018

யாழிற்கு விஜயம் செய்யும் மைத்திரி! எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கிய மக்கள்!


யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழ். பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில் நுட்ப மையத்தை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், அமைச்சர் ஜோன் அமரதுங்க, வட மாகாண ஆளுநர், வட மாகாண முதலமைச்சர் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






http://www.tamilwin.com/community/01/177421?ref=home-top-trending

No comments:

Post a Comment