பிரித்தானியாவில் 400க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பல பள்ளிகளிலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்காவிலிருந்த அனுப்பப்பட்டதாகக் கருதப்படும் அந்த இ-மெயிலில் ஒரு மாணவனின் பையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. 5000 டொலர்கள் கொடுக்கப்படாவிட்டால் அதை வெடிக்கச் செய்வோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
லண்டன், Yorkshire, Humberside, Northumberland, the West Midlands, Lincolnshire, Gloucestershire, Bristol, மற்றும் Bedfordshire ஆகிய நகரங்களிலுள்ள பள்ளிகளுக்கு இத்தகைய மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. Suffolk மற்றும் Essexஇலும் இதே நிலைமைதான்.
சில பள்ளிகளில் பொலிசார் மாணவர்களின் பைகளை சோதனையிட்டார்கள். சில பள்ளிகளிலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அந்த வெடிகுண்டு மிரட்டலால் பிரித்தானியாவின் பல இடங்களிலும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பொலிசார் இது ஒரு போலியான மிரட்டல் என்று தெரிவித்தனர்.
http://news.lankasri.com/uk/03/174326?ref=ls_d_uk
No comments:
Post a Comment