எலிஸபெத் மகாராணியின் செயலாளரைத்தான் டயானாவின் இரண்டாவது அக்கா ஜேன் திருமணம் செய்து கொண்டிருந்தார்.
அக்காவைப் பார்க்கச் செல்லும் டயானா அவ்வப்போது அரண்மனை விழாக்களிலும் பங்கு கொள்வதுண்டு.
இது தவிர டயனாவின் அப்பா அல்டாஃப், இங்கிலாந்து அரசு குடும்பத்தின் குதிரை பராமரிப்பு வீரராக இருந்ததால் அரச குடும்பத்துடன் நெருங்கிப் பழகுவார்.
இளவரசர் சார்லஸ் டயானாவைப் பார்த்தது அப்படி ஒரு விழாவில்தான். தனது திருமணத்தை ரொம்ப நாட்களாகத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த சார்லஸை முதல் பார்வையிலேயே கவர்ந்து விட்டார் டயானா.
பின் இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கினார்கள். இங்கிலாந்து அரச குடும்பத்தில் நடந்த முதல் காதல் திருமணமே சார்லஸ் - டயானாவுடையது தான்.
டயானா தொடர்பில் இனும் மர்மமான சுவாரஸ்யங்கள் அடங்கிய காணொளி ஒன்றும் வைரலாகி வருகின்றது.
http://www.manithan.com/uk/04/162647?ref=ls_d_manithan
அன்று பட்டினத்தாரை பத்திரி மன்னன் கழுவேற்றக் காரணம் அவர் மனைவியை பட்டினத்தார் ஒழுக்கமற்றவர் என்று சொன்னதால்,ஆனால் பின்னாளில் அதுவே உண்மையாகி அரசி குதிரை பராமரிப்பவருடன் உறவாட்டுவது கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பத்திரியார் துறவி ஆனார்!
நேற்று அதே கதை ஆனால் கணவன் இளவரசன் துறவியாகவில்லை,இன்னொருத்தியுடன்!
பிள்ளைகள்??!
மனைவியோ பலருடன் தொடர்பிலிருந்துவிட்டு இஸ்லாமியர் ஒருவரை மன முடிக்க போன சமயத்தில் கார் விபத்தாகி மரணித்தார்!
அங்கோ மக்கள் அரசியை வெறுத்தார்கள்,அரசி பணக்காரிதான்,ஆனால் நடத்தை சரியில்லை என்பதால் மக்கள் ஏற்கவில்லை!
இங்கோ அவருக்கு காதல் தேவதை என்று பட்டம் கொடுத்து பாட்டுக்கள் பாடி கௌரவித்துவருகிறார்கள்!
வெண்புறா என்ற அமைப்பில் பல இளம் பெண் போராளிகள் வெடிகுண்டு அகற்றினார்கள் யாரும் பாராட்டியதில்லை!பலர் பாதுகாப்புக்கு மத்தியில் அதையே செய்வதாக படம் போட்ட அந்த பலரை படுக்கையில் பார்த்த காதல்தேவதைக்கு மக்களை நேசிப்பவர் என்று நம் ஊடகங்களே பட்டம் கொடுத்து கௌரவிக்க நம் சினிமா பாட்டுப்பாடி அவர் செயலை வரவேற்க.....
இன்று நம் பிள்ளைகள் எல்லாம் காதல்தேவர்களாக....
பெற்றோர் அதையிட்டு எதற்காக கண்ணீர் வடிக்கின்றார்கள்??
வரவேற்றது வந்துள்ளது!அனுபவியுங்கள்!
No comments:
Post a Comment