Sunday, January 14, 2018

படுகொலைகளை இராணுவத்தினர் ஒப்புக்கொண்டமை வரவேற்கத்தக்கது!


ரோஹிங்யாவில் படுகொலைகள் இடம்பெற்றதாக படையினர் ஒப்புக்கொண்டமை வரவேற்கப்பட வேண்டியது என மியன்மாரின் தலைவி ஆங் சாங் சூ கி தெரிவித்துள்ளார்.
படையினரின் செயற்பாடுகளுக்கான பொறுப்பினை இராணுவம் ஏற்றுக்கொண்டமை சாதகமான ஓர் மாற்றம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்நாட்டு படையினரால் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் 10 ரோஹிங்ய முஸ்லிம்கள் தொடர்பில் குறிப்பிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த கொலைகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

http://www.tamilwin.com/community/01/170933?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment