அன்னை மடியில் : 19 ஏப்ரல் 1924 — ஆண்டவன் அடியில் : 28 டிசெம்பர் 2017
யாழ். கொக்குவில் நந்தாவில்லைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை உவர்மலையை வதிவிடமாகவும் கொண்ட குலவீரசிங்கம் மருக்கொழுந்து அவர்கள் 28-12-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், கனகசபை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குலவீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், கனகசபாபதி, முத்துராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தேவசகுந்தலா, குலேந்திரன், தேவகுமாரி(ராசாத்தி- ஜெர்மனி), கதிர்காமபாலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற வல்லிபுரநாதன், புஸ்பராணி, காலஞ்சென்ற பாக்கியநாதன், யசோதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கமலாதேவி, சாரதாமணிதேவி, தெய்வேந்திரன், உதயகுமாரன் ஆகியோரின் சிறிய தாயாரும்,
தேவசகிலா விஜயமோகன், நித்தியகுமணன் பிரபாலினி(சுவிஸ்), குலகுமணன் தீபா(சுவிஸ்), செந்தில்குமணன் ஷர்மிலி, பவகுமணன், பாலகுமணன்(லண்டன்), குலதீபன் மேகலா, குலதீஸ் டிலானி(லண்டன்), குலதர்சன், குலவர்ணன் நிவேதிகா, பிறைசன்னா ரேணுகா(ஜெர்மனி), பிறைதீஸ் கல்யாணி(ஜெர்மனி), கனோஜன், குலபாலினி ஜெயபிரகாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிரா, அபினயா, அபிமன்யு, நிஜை(சுவிஸ்), நிரோஜன்(சுவிஸ்), மதுசியா(சுவிஸ்), மதுகாஸ்(சுவிஸ்), கர்ஷா, பவின்(ஜெர்மனி), சேஸ்மிதன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடலுக்கு 31-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் சமயக்கிரியை நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:இல.09, தேன்தமிழ் வீதி, உவர்மலை, திருகோணமலை. |
No comments:
Post a Comment