Friday, December 1, 2017

பிரித்தானியாவின் அதிரடி அறிவிப்பு!! இலங்கையர்கள் அகதி அந்தஸ்து கோர முடியாது??

பிரித்தானிய அரசாங்கம் புதிதாக எந்த ஒரு இலங்கை ஏதிலியின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவில் மொத்தமாக 3 ஆயிரத்து 535 ஏதிலிகள் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 838 ஏதிலிகளின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையைச் சேர்ந்த 48 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 82 பேரும் ஏதிலி அந்தஸ்த்து கோரி விண்ணப்பித்துள்ள போதும், அவர்களுள் ஒருவரது விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/srilanka/01/166781?ref=home-imp-parsely

No comments:

Post a Comment