Monday, December 18, 2017

வேறு ஆணுடன் வாழ்ந்த மனைவி: ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்

மனைவி வேறு ஆணுடன் வாழ்ந்து வந்த நிலையில் அவரை ஆத்திரத்தில் கொன்று உடல் பாகங்களை பல துண்டுகளாக ஆக்கி ஆங்காங்கே வீசிய கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. ராஜ்குமார் என்பவருக்கும் கீதாஞ்சலி என்பவருக்கும் கடந்த 2010-ல் திருமணமான நிலையில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், ராஜ்குமார் சகோதரியின் கணவர் ராகேஷ் குமாருடன் கீதாஞ்சலிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த யூன் மாதம் முதல் அவருடன் தனியாக கீதாஞ்சலி வசித்து வந்தார்.
கடந்த மாதம் 13-ஆம் திகதி, கணவர் வீட்டுக்கு வந்து துணிகளை எடுத்து செல்ல கீதாஞ்சலி வந்துள்ளார்.

அப்போது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட ஆத்திரமடைந்த ராஜ்குமார், கீதாஞ்சலி தலையை வேகமாக சுவற்றில் மோதி கொலை செய்துள்ளார்.
பின்னர் கீதாஞ்சலி உடலை பல துண்டுகளாக வெட்டிய ராஜ்குமார் அதை நகரில் பல்வேறு பகுதிகளில் வீசியெறிந்துள்ளார்.
இதனிடையில் கீதாஞ்சலி காணவில்லை என பொலிசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பொலிசார் நடத்திய விசாரணையில் ஒரு பெண்ணின் உடல் பகுதி அவர்களுக்கு கிடைத்தது, இதை வைத்து காணாமல் போன பெண்களின் பெயருடன் பொலிசார் ஒப்பிட்டு பார்த்ததில் அது கீதாஞ்சலியின் உடல் பகுதி என தெரியவந்தது.
இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் ராஜ்குமாரிடம் பொலிசார் விசாரிக்க, அனைத்து உண்மைகளையும் அவர் ஒப்பு கொண்டுள்ளார்.
கீதாஞ்சலியின் மீதி உடல் பகுதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது ராஜ்குமாரை கைது செய்துள்ள பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

http://news.lankasri.com/india/03/167692?ref=recommended2

No comments:

Post a Comment