Friday, December 1, 2017

திரு செல்லத்துரை பஞ்சலிங்கம்(உரிமையாளர் கணேசா ஸ்ரோர்ஸ்) மரண அறிவித்தல்!


தாவடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  திரு செல்லத்துரை பஞ்சலிங்கம்(கணேசா ஸ்ரோர்ஸ்,bicycle parts shop,hardware) இலங்கை நேரப்படி நேற்று காலை காலமானார்
அன்னார் தாவடியை சேர்ந்த செல்லத்துரை செல்லாச்சி தம்பதிகளின் மகனும் தம்பிப்பிள்ளை,ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும் திலகவதியின் அன்புக்கணவரும் பகீரதன்(சுவிஸ்),கிரிதரன்(இலங்கை),ஜெயதர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்புத்தந்தையும் காலஞ்சென்ற சின்னத்தம்பி (இராசா),மாணிக்கவாசகர்,அருளம்பலம்,நவரத்தினம்,சொர்ணபுஸ்பம் ஆகியோரின் அன்புச்சகோதரரும் மேனகா(சுவிஸ்).சுகல்யா,பாலகுமாரா ஆகியோரின் அன்பு மாமனாரும் நிலுக்சன்,ஜனுக்சன், திஷானா,கிதுஷா,காலஞ்சென்ற ஹரிணி,மதுகிருஸ்ணா ஆகியோரின் அன்புப்பேரனும் இந்துஷன் தெமிஷன் ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்!

அன்னாரின் இறுதிக்கிரிகை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் ஒன்பது மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று முற்பகல் பத்து மணியளவில் தாவடி இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனக்கிரிகைகள் நடைபெறும்!

இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்!

தகவல் 
குடும்பத்தினர் 

விலாசம்
பாடசாலை ஒழுங்கை
தாவடி  
கொக்குவில்.

No comments:

Post a Comment