தோற்றம் : 18 ஒக்ரோபர் 1939 — மறைவு : 4 டிசெம்பர் 2017
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Storville ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராசேந்திரன் அவர்கள் 04-12-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அன்னபூரணம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபை இரத்தினம்மாள் தம்பதிகளின் அருமை மருமகனும்,
யோகராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ரமணன், குருபரன், ராகுலன், ரஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நாகேஸ்வரி, சாரதாதேவி, பரமேஸ்வரி, யோகேஸ்வரி, சுலோசனாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மிஸ்சால், தாட்சாயினி, கீர்த்திகா, கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற கணேசபிள்ளை, விநாயகலிங்கம், சாமிநாதன், தர்மராசா, சிவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யசிகா, யொனதன், சாருஜா, திசான், ஐசன், கிர்தீஸ், கிருஸ்சன், நேகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment