Friday, December 15, 2017

தமிழர்கள் யாரென்று தெரியாது...ஆனால் இதற்கு நாங்கள் அடிமை: பிலிப்பைன்ஸ் ராணுவத்தினர்! -


இன்றைக்கு தமிழக விளையாட்டுகள் என்றால் அதை புறம் தள்ளி விட்டு கிரிக்கெட்டிலும், கால்பந்திலும் நம் கவனம் போகிறது.
ஆனால் தமிழக சிறுவர்கள் பொழுது போக்காக விளையாடும் கிட்டிப்புள் (கில்லி தண்டு) விளையாட்டை பிலிப்பைன்ஸ் நாட்டு இராணுவத்தினர் தங்கள் மன அழுத்தத்தை போக்கிக்கொள்ள விளையாடுகின்றனர்.
இந்த விளையாட்டு எங்கிருந்து வந்தது என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் இந்த விளையாட்டிற்கு நாங்கள் அடிமை என்று கூறுகின்றனர்.
கிட்டிப் புள்ளு என்பது தமிழரின் பழமையான ஒரு விளையாட்டு ஆகும். பொதுவாகச் சிறுவர் மட்டுமே விளையாடும் விளையாட்டாகும்.
ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு பெயர்:
  1. கரகொட்டி, குட்டி-கோல் – கேரளம்
  2. கிட்டிதக்கா – இந்தி மொழி
  3. கிட்டிப்புள் – திருச்சி மாவட்டம்
  4. கில்லி-தண்டா – மகாராட்டிரம்
  5. கில்லி-தண்டு – கோவை மாட்டம்
  6. குச்சிக்கம்பு, குச்சி-அடித்தல் – தமழகப் பொதுவழக்கு
  7. குல்லி-தண்டா – வங்கம்
  8. சிலதா – நீலகிரித் தொதுவர்
  9. சில்லாங்குச்சி – நெல்லை மாவட்டம்
  10. திப்லி – ஆந்திர மாநிலக் கோண்டு மக்கள்
  11. புள்ளுக்கிட்டி, சிங்காம்புள் – குமரி மாவட்டம்
இந்த விளையாட்டின் மூலம் குழுவினரிடையே நல்ல புரிதல் கிடைப்பதாகவும், மற்ற விளையாட்டுகள் போல அல்லாமல் அனைவரின் பங்களிப்பும் இதில் இருப்பதாக கூறுகின்றனர்.
நம் தமிழ் விளையாட்டான கிட்டிப்புள் விளையாட்டை பிலிப்பைன்ஸ் நாட்டு இராணுவத்தினர் எவ்வளவு சந்தோஷமாக விளையாடுகின்றனர் என்பதை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள். நமக்கும் மெய் சிலிர்க்கும்.

http://www.manithan.com/india/04/153577?ref=rightsidebar-lankasrinews

No comments:

Post a Comment