Friday, December 22, 2017

உலகின் மிக வயதான ஆண் மரணம்

உலகின் மிக வயதான ஆண் என கருதப்படும் பிரேசிலில் வசித்த ஜோஸ் அகுனிலோ டோஸ் தனது 129-வது வயதில் மரணமடைந்துள்ளார்.
நாட்டின் சோ பவுலோ மாநகராட்சியில் உள்ள முதியோர் இல்லத்தில் தான் ஜோஸ் கடந்த 44 ஆண்டுகளாக வசித்து வந்தார்.
இந்நிலையில் இயற்கையான காரணங்களால் கடந்த புதன்கிழமை ஜோஸ் மரணமடைந்தார்.
இதையடுத்து அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருமணம் செய்து கொள்ளாமலே இறுதி வரை வாழ்ந்த ஜோஸ் ஒரு சமயம் அதிகம் புகைப்பிடிப்பவராக இருந்தார்.

பின்னர் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அந்த பழக்கத்தை விட்டுவிட்டார்.
ஜோஸ் குறித்து அவர் தங்கியிருந்த முதியோர் இல்ல தலைவர் சீசர் கேம்போஸ் கூறுகையில், ஜோஸ் கடந்த 1888-ல் பிறந்ததற்கான ஆவணங்கள் உள்ளன.
இதை வைத்து அவர் தான் உலகின் வயதான ஆண் என நம்புகிறோம்.

உயிரிழந்த ஜோஸுடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் ஆறு பேர் ஆவார்கள். முதியோர் இல்லத்தில் அவர் யாருடன் அதிகமாக பேசாமல் அமைதியாகவே எப்போதும் இருப்பார்.
கொலஸ்ட்ரால், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற எந்தவொரு நோய்களும் அவரை இறுதி வரை தாக்கவில்லை என கூறியுள்ளார்.


http://news.lankasri.com/othercountries/03/168098?ref=ls_wn_d

No comments:

Post a Comment