மலர்வு : 5 மார்ச் 1942 — உதிர்வு : 10 டிசெம்பர் 2017
யாழ். கொக்குவில் மேற்கு மணியர்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி மகாதேவா அவர்கள் 10-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பாக்கியம் தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பவளம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகாதேவா அவர்களின் அன்பு மனைவியும்,
றிஷாந்தினி, பார்த்தீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிறேமகுமார், சீத்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பரமேஸ்வரி, நாகேஸ்வரி, சொர்ணலக்ஷ்மி, புஸ்பவதி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, இரத்தினசபாபதி மற்றும் பாக்கியநாதன், பரமேஸ்வரி, ஞானேஸ்வரி, கமலேஸ்வரி, அசோக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அதீனா, அதீனன், அக்ஷாயினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-12-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: மணியர்பதி வீதி, கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம். |
No comments:
Post a Comment