Friday, December 1, 2017

விடுதலைக்காக பாடுபட்ட தேசிய வீரர் யார்? பிரபாகரன் என பதில் எழுதிய கிளிநொச்சி மாணவன்!

நாடளாவிய ரீதியில் முன்றாம் தவணைப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதில் கிளிநொச்சியில் உள்ள பாடசாலையில் பரீட்சைத்தாளில் கேட்கப்பட்ட கேள்விக்கு மாணவர் ஒருவர் எழுதிய பதில் சமூக வலைத்தளங்களில் கசிந்து பரவி வருகின்றது.

குறித்த வினாத்தாளில் “எமது நாட்டின் தேசிய விடுதலைக்காக பாடுபட்ட தேசிய வீரர்கள் இருவரின் பெயர்கள் எழுதுக?” என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு குறித்த மாணவன் “பிரபாகரன்” என பதில் எழுதியுள்ளார். இது தொடர்பிலான புகைப்படங்கள் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவி வருவதுடன் பல கருத்துக்களும் அதில் பரிமாற்றப்படுகின்றது.

இதேவேளை கடந்த முறையும் தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கிளிநொச்சியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
“தூக்குக் குண்டைப் பயன்படுத்துபவர் யார்?” என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த மாணவன்,“ஆமி” என்று பதிலளித்துள்ளார்.
 இது தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் தற்போது கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.



http://www.tamilwin.com/community/01/166774?ref=home-top-trending

No comments:

Post a Comment