(இளைப்பாறிய ஆசிரியை- கொக்குவில் மேற்கு C.C.T.M, நயினாதீவு நாகபூசணி ஆரம்பப் பாடசாலை, அனலைதீவு வடக்கு ஆரம்பப் பாடசாலை)
அன்னை மடியில் : 22 ஒக்ரோபர் 1927 — ஆண்டவன் அடியில் : 3 டிசெம்பர் 2017
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி மருதப்பு அவர்கள் 03-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கனகசபை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மருதப்பு(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தயாளன் மற்றும் தயாநிதி, தயாகரன், தயாகுணம், தயாபரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம், செல்வநாயகி(பிரான்ஸ்), குலேந்திரன்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான துரைராஜா, அருளானந்தம்(அருணன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற புஷ்பகுமார் மற்றும் நிரஞ்சனா, ஸ்ரீஜினி, றஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான உருக்குமணி(முன்னாள் ஆசிரியை), நல்லையா(முன்னாள் பிரதிக்கல்விப்பணிப்பாளர்) மற்றும் சித்திரா, இராஜநாயகி, காலஞ்சென்றவர்களான செல்லம்மா, திலகவதி, சபாரட்ணம், தில்லையம்பலம் மற்றும் பரமேஸ்வரி, திருஞானம், திருச்செல்வம், ஜெகதாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிரிஷான்குமார், சுதர்சன், நிதர்ஷனி, கௌசிகன், கௌசிகா, அனோஜ், அபிநயா, அன்னலட்சுமி, ஆரதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|
No comments:
Post a Comment