Saturday, December 23, 2017

நத்தார் கேக் தயாரிக்கும் போட்டியில் இலங்கை பெண் ஒருவர் முதலிடம்


இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் உலகளாவிய ரீதியில் பிரபலமடைந்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இத்தாலியில் நடைபெற்ற நத்தார் கேக் தயாரிக்கும் போட்டியில் இலங்கை பெண் ஒருவர் முதலிடம் பிடித்துள்ளார்.
இலங்கையின் சார்பில் கலந்து கொண்ட மஞ்சுளா என்ற பெண்ணே முதலிடம் பிடித்துள்ளார்.
பல நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், மஞ்சுளா முதலிடம் பிடித்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்தப் போட்டி கடந்த 20ம் திகதி சிசிலி தீவில் நடைபெற்றுள்ளது.
மஞ்சுளா தொடர்பான செய்தியை புகைப்படத்துடன் இத்தாலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
தான் இவ்வளவு பிரபலமடைவேன் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை என மஞ்சுளா சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.





http://www.tamilwin.com/europe/01/168842?ref=ls_ta_d

No comments:

Post a Comment