தோற்றம் : 26 ஒக்ரோபர் 1932 — மறைவு : 16 டிசெம்பர் 2017
யாழ். தாவடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் சிவக்கொழுந்து அவர்கள் 16-12-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து(மார்க்கண்டு) அவர்களின் அன்பு மனைவியும்,
நவரத்தினம்(கனடா), விக்கினேஸ்வரிதேவி, சறோஜினிதேவி(கனடா), காசிவிஸ்வநாதன்(விஜயம்- கனடா), சசீலாதேவி(பேபி- கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மனோன்மணி மற்றும் சொர்ணலிங்கம்(ஓய்வுநிலை ஆசிரியர்), கணேசமூர்த்தி(நியூசிலாந்து), காலஞ்சென்ற புஷ்பரத்தினம் மற்றும் தேவராசா, புவனதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திராதேவி(கனடா), காலஞ்சென்ற கருணானந்தன்(ராசா) மற்றும் திவாகரன்(கனடா), ஜெகதீஸ்வரி(கனடா), கணேசானந்தன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுப்பிரமணியம், கமலேஸ்வரி, முருகம்மை, சுப்பிரமணியம், தனலட்சுமி, சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சஞ்செயன், நிரோசிகா, சசிகரன், றஜீவ்கரன், தனுஷியா, கஜேந்திரன், சஜிதா, கணன், வசீக்கா, விவேக்கா, துவாரகன், விந்துஜன்(கொமர்ஷல் வங்கி- வெலிமடை), ஹரிகஜன்(கட்டட ஒப்பந்தகாரர்), றசீதா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கருணியா, கர்சிகா, சயன், முகில் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் தாவடியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: சிவபதி, மாரிதோட்டம், தாவடி வடக்கு, கொக்குவில், யாழ்ப்பாணம். |
No comments:
Post a Comment