Saturday, December 23, 2017

கணவன் கண்முன் மனைவிக்கு ஏற்பட்ட துயரம்... வட்டி கட்டாததால் அரங்கேறிய அவலம்!

கந்துவட்டி என்ற பெயரில் மக்களை அணுஅணுவாக சித்ரவதை செய்யும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஹைத்ராபாத்தைச் சேர்ந்த நிரஞ்சன்(46).. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நிலையாக ஒரு அலுவலகத்திலும் வேலை செய்தது இல்லை.
இவருக்கு பூர்வீக சொத்து என்று எதுவும் இல்லாமலும், வாங்கும் சம்பளத்தினை உடனே செலவு செய்துவிடுவதுமாகவே இருந்துள்ளார்.
இவரது முன்கோபத்தின் காரணமாக ஒரே அலுவலகத்தில் நிலையான வேலையை செய்து வராத நிரஞ்சன் ஒரு அலுவலகத்தில் மட்டும் 2 ஆண்டுகளாக பணியாற்றி அங்கும் தனது கோபத்தின் காரணமாக வேலையினை இழந்துள்ளார்.
இதனை தனது மனைவிக்கு தெரியாமல் மறைத்தும் வந்துள்ளார். இவ்வாறு வேலையில்லாத காரணத்தால் நாளடைவில் மனநிலை சரியில்லாதவர் போன்று காணப்பட்ட அவர் ஒரு நாள் மாடியிலிருந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
மனைவி அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவ செலவிற்கு பணமில்லாத காரணத்தால் நிரஞ்சனின் உடன்பிறந்த சகோதரர்களிடம் உதவி கேட்டுள்ளார். அவர்கள் தன்னால் 60 ஆயிரம் மட்டுமே கொடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
கணவனை காப்பாற்ற என்ன செய்வது என்று திகைத்த மனைவியும், மகளும் அவர்களது பக்கத்து வீட்டினருக்கு தெரிந்த கந்துவட்டி காரரிடம் 1 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கியுள்ளனர்.
சிகிச்சை முடிந்து 20நாளில் வீட்டிற்கு வந்த கணவரிடம் கடன் வாங்கியதை கூறியுள்ளார் மனைவி. கணவரும் தனக்கு வேலை பறிபோன விடயத்தை அப்போது தான் கூறியுள்ளார்.
வாங்கிய பணத்திற்கு 2 மாதம் கூட வட்டிகட்ட முடியாத நிலையில் தவித்த இவர்கள் அதனை சரிசெய்வதற்கு மீண்டும் வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்துள்ளனர்.
ஒரு இடத்தில் வாங்கிய கடனை அடைக்கும் முன் அடுத்த கந்துவட்டி கழுத்தை நெறிக்க ஆரம்பித்துள்ளது. வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்து வந்தவர்கள் 2 மாதம் எந்தவொரு தொந்தரவும் கொடுக்காமல் இருந்துள்ளனர்.
திடீரென ஒரு நாள் வீட்டிற்கு கணவன் முன்னே மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமின்றி தடுக்க வந்த கணவனை தாக்கிவிட்டும் சென்றுள்ளனர். விடயம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று மூன்றுபேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

http://www.manithan.com/india/04/154584?ref=ls_ma_d

No comments:

Post a Comment