அயர்லாந்தில் 85 வயதுடைய முதியவர், கிட்டத்தட்ட அதே வயதில் இருக்கும் தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்துள்ளார்.
டுப்லின் நகரை சேர்ந்தவர் மேட் (85), இவரின் 30 ஆண்டு கால நண்பர் மைக்கேல் ஓ சுலிவான். இவரும் 80 வயதை கடந்துவிட்டார்.
மேட்-டுக்கு திருமணமாகாத நிலையில், மைக்கேல் பல ஆண்டுகளுக்கு முன்னரே மனைவியை விவாகரத்து செய்தவர் ஆவார்.
மேட்-டுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் மைக்கேல் தான் அவரை கவனித்து வருகிறார்.
இந்நிலையில் தான் இறந்துவிட்டால் தனது பெரிய வீடு என்னவாகும் என்ற கவலை மேட்-டுக்கு ஏற்பட்டுள்ளது.
அதை தனது நண்பர் மைக்கேலுக்கு பரிசாக அவர் கொடுத்தாலும் கூட அரசின் விதிப்படி 33 சதவீதம் மூலதன கையகப்படுத்துதல் வரி வீட்டு மதிப்பிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.
இதற்கு மாற்று வழியை யோசித்த நண்பர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
திருமணம் செய்தால் இருவருக்கும் உறவுமுறை ஆகிவிடும், அதனால் குறித்த வரியை அரசுக்கு செலுத்த வேண்டியது இல்லை என்பதாலேயே இம்முடிவை எடுத்துள்ளனர்.
மேட் கூறுகையில், என் நண்பர் மிகவும் அன்பானவர், இந்த முடிவை ஓரின சேர்க்கைக்காக நாங்கள் எடுக்கவில்லை, வரியை கணக்கில் கொண்டே எடுத்தோம் என கூறியுள்ளார்.
மேட்-டும், மைக்கேலும் வரும் 22-ஆம் திகதி திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்திருந்த நிலையில் வானிலை காரணமாக ஜனவரிக்கு பிறகு அதை ஒத்தி வைத்துள்ளனர்.
http://news.lankasri.com/othercountries/03/167760
டுப்லின் நகரை சேர்ந்தவர் மேட் (85), இவரின் 30 ஆண்டு கால நண்பர் மைக்கேல் ஓ சுலிவான். இவரும் 80 வயதை கடந்துவிட்டார்.
மேட்-டுக்கு திருமணமாகாத நிலையில், மைக்கேல் பல ஆண்டுகளுக்கு முன்னரே மனைவியை விவாகரத்து செய்தவர் ஆவார்.
மேட்-டுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் மைக்கேல் தான் அவரை கவனித்து வருகிறார்.
இந்நிலையில் தான் இறந்துவிட்டால் தனது பெரிய வீடு என்னவாகும் என்ற கவலை மேட்-டுக்கு ஏற்பட்டுள்ளது.
அதை தனது நண்பர் மைக்கேலுக்கு பரிசாக அவர் கொடுத்தாலும் கூட அரசின் விதிப்படி 33 சதவீதம் மூலதன கையகப்படுத்துதல் வரி வீட்டு மதிப்பிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.
இதற்கு மாற்று வழியை யோசித்த நண்பர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
திருமணம் செய்தால் இருவருக்கும் உறவுமுறை ஆகிவிடும், அதனால் குறித்த வரியை அரசுக்கு செலுத்த வேண்டியது இல்லை என்பதாலேயே இம்முடிவை எடுத்துள்ளனர்.
மேட் கூறுகையில், என் நண்பர் மிகவும் அன்பானவர், இந்த முடிவை ஓரின சேர்க்கைக்காக நாங்கள் எடுக்கவில்லை, வரியை கணக்கில் கொண்டே எடுத்தோம் என கூறியுள்ளார்.
மேட்-டும், மைக்கேலும் வரும் 22-ஆம் திகதி திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்திருந்த நிலையில் வானிலை காரணமாக ஜனவரிக்கு பிறகு அதை ஒத்தி வைத்துள்ளனர்.
http://news.lankasri.com/othercountries/03/167760
No comments:
Post a Comment