Friday, December 1, 2017

தொலைக்காட்சியை பார்த்து விபரீதம்: தீயில் கருகி பலியான 7 வயது சிறுமி

கர்நாடகாவில் டிவி சீரியலைப் பார்த்து, அதில் வருவது போல நெருப்பினைப் பற்ற வைத்துக் கொண்டு நடனமாடிய 7 வயது சிறுமி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா டவுனைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். கூலித் தொழிலாளியான, இவரது 7 வயது மகள் பிரார்த்தனா 2ஆம் வகுப்பு படித்து வந்தாள்.
அவள் வீட்டில் வழக்கமாக ஒரு கன்னட சீரியலை பார்த்து வந்தாள். இந்நிலையில், அந்த சீரியலில் வரும் நடிகை ஒருவர், தன் கை மற்றும் கால்களில் தீ வைத்துக் கொண்டு, தீப்பந்தம் ஏந்தி நடனமாடுவது போன்ற காட்சிகள் வந்துள்ளன.
அதைப் பார்த்த பிரார்த்தனாவும், அதே போல கடந்த 11ஆம் திகதி, தானும் கையில் ஒரு காகிதத்தினை எடுத்து தீ வைத்துக் கொண்டு நடனமாடியிருக்கிறாள். அப்போது அவளின் ஆடையில் தீப்பற்றிக் கொண்டுள்ளது.
சிறுமின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, தீயை அணைத்து அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
15 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பிரார்த்தனா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தாள்.
இதனைத் தொடர்ந்து, சிறுமியின் தந்தை மஞ்சுநாத், ஹரிஹரா டவுன் பொலிசில் புகார் அளித்தார். பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தாவணகெரே மாவட்ட நிர்வாகம், டிவி சீரியல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.


http://news.lankasri.com/india/03/166467

No comments:

Post a Comment