Monday, December 18, 2017

பிப்ரவரி 30ஆம் திகதி பிறந்த நபர்: ஒரு ஆண்டாக போராடும் இவரைப் பற்றி தெரியுமா?


பஞ்சாப்பில் 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் கடந்த ஒரு வருடமாக தனது பிறப்பு சான்றிதழில் உள்ள பிழையை சரி செய்ய போராடி வருகிறார்.
பஞ்சாப்பின் Ludhiana பகுதியைச் சேர்ந்தவர் Harpreet Singh(22). இது குறித்து அவர் கூறுகையில், நான் கடந்த 1995-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ஆம் திகதி பிறந்தேன், ஆனால் பிறப்பு சான்றிதழில் தான் பிறந்தது பிப்ரவரி 30-ஆம் திகதி 1995-ஆம் ஆண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத்திற்கு 28-நாட்கள் மட்டுமே, அதுவும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை 29-தான் வரும், இதன் காரணமாக என்னுடைய 12-ஆம் வகுப்பு படிப்பு தடைபட்டது.
அதைத் தொடர்ந்து தற்போது கனடா செல்வதற்கு பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்தேன், ஆனால் அங்கும் அவர்கள் பிறப்பு சான்றிதழில் தவறு இருக்கிறது என்று கூறியதால், பாஸ்போர்ட் கூட கிடைக்காமல் கடந்த ஒரு வருடமாக போராடி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

அவர் தொடர்பான பிறப்பு சான்றிதழ் இணையத்தில் வைரலாகி வருவதுடன், அந்த பிறப்பு சான்றிதழில் மூன்று அரசு அதிகாரிகளின் கையப்பம் இருந்துள்ளது. இந்த சான்றிதழ் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், கூடிய விரைவில் இந்த தவறு சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

http://news.lankasri.com/india/03/167796

No comments:

Post a Comment