Wednesday, November 8, 2017

பச்சை எலுமிச்சை வைத்து வீட்டில் உள்ள கெட்ட சக்தியை விரட்டலாம்


எலுமிச்சை பழமானது உடல் ஆரோக்கியம், அழகு போன்றவற்றில் மட்டுமின்றி, நம் வீட்டில் உள்ள கெட்ட சக்தியை வெளியேற்றவும் உதவுகிறது.
பச்சை எலுமிச்சை பழத்தை வைத்து தீய சக்தியை வெளியேற்றுவது எப்படி?
  • 3 பச்சை எலுமிச்சையை எடுத்து வீட்டின் பல்வேறு பகுதியில் வைக்க வேண்டும். அந்த எலுமிச்சை எப்போது மஞ்சள் அல்லது கருப்பாக மாறுகிறதோ, அப்போது அதை தூக்கி எறிந்து விட்டு, மீண்டும் புதிய பச்சை எலுமிச்சையை அந்த இடத்தில் வைக்க வேண்டும்.
  • மழை நீரில் எலுமிச்சையின் தோலைப் போட்டு கொதிக்க வைத்து, வீட்டில் தெளிக்க வேண்டும். இதனால் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கும்.
  • ஒரு பீங்கான் கூடையில் 8 எலுமிச்சையை வைத்து, அதன் நடுவில் ஒரு எலுமிச்சையை வைத்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.
  • வேலை செய்யும் இடம் அல்லது மேஜையில் 3 பச்சை எலுமிச்சை பழத்தினை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
  • ஒரு கண்ணாடி கிண்ணத்தில் 3 எலுமிச்சையை போட்டு, வீட்டில் உள்ள மேஜையில் வைக்க வேண்டும். இதனால் உறவுகள் பலப்படும்.
  • 1 பச்சை அல்லது மஞ்சள் நிற எலுமிச்சையை பாக்கெட் அல்லது பையில் வைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டு வீடு திரும்பியதும், இரவில் அந்த எலுமிச்சை நன்கு காய்ந்திருந்தால், அது உங்களை நோக்கி வந்த எதிர்மறை ஆற்றலை ஈர்த்துள்ளது என்று அர்த்தம்.
  • ஒரு எலுமிச்சையை 4 பகுதிகளாக நறுக்கி, அதை உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைத்து, கட்டிலுக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையைக் கையால் தொடாமல், ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து தூக்கி எறிந்து விட வேண்டும். இம்முறையை தொடர்ந்து 3 நாட்கள் செய்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

No comments:

Post a Comment