Sunday, November 19, 2017

நாற்கூட்டு முன்னணி, நாய்க்கூட்டு முன்னணியான துயரக்கதை!


மூத்தவன் புளட்டில 
நடுவிலான் டெலோவிலே 
கடை குட்டி புலியில் என்று பெருமை பட்ட தாய்மார் 
அயல்வீட்டு என்ஜினியர் மகன் ஈபிஆர்எவ்
முன்வீட்டு வாத்தியார் மகன் ஈரோஸ் என்று இறுமாந்திருந்தோம் 
கோட்டையில் சைரன் ஊதி அனைவரையும் காத்த புளொட்
ஆண்களும் பெண்களுமாய் செங்கொடிகள் கட்டிய அழகிய ஈபிஆர்எல் எவ்
அறிவாளிகள் என்று போற்றப்பட்ட ஈரோஸ்
வீரத்துடன் திகழ்ந்த ரெலோஸ்டுகள்
கட்டுக்கோப்பான ஒழுக்கமான வீரர்களாய் திகழ்ந்த புலிகள்
அழகான அந்த நாட்கள்
எதிரியைக்கண்டால் கட்சி பேதம் மறந்த போராளிகள்
விஷம் எங்கிருந்து வந்தது? தான் பெரிது என்று எண்ணாமல் தமிழ் ஈழம் தமிழ் மக்கள் பெரிது என்று சம்மந்தப்பட்டவர்கள் எண்ணி இருந்தால் நிச்சாயமாக தமிழர்கள் நாம் இன்று நடு றோட்டில் நின்றிருக்கமாட்டோம்.


 



நான்:தலைமை மோகம் கொண்டவர் யார் என இன்னுமா உங்களுக்கு தெரியாது!ஆனால் அவர் மட்டுமல்ல குட்டிமணி,ஜெகன் காட்டிக்கொடுக்கப்பட்ட பின் தலைவனாக தன்னை எண்ணி மகிழ்ந்து ஏமாந்த அவருக்கு அருகில் இருந்தவர்களும் அதை மறந்ததால் வந்த விஷம் ....ஸ்ரீ அண்ணனுக்கும் அதே ஆசை என்றால் அவர் தளபதிகளோ தாஸ்,பொபி தங்களுக்குள் மோதி யாழ் பெரியாஸ்பத்திரியையே கொலைக்களமாக்கி அதனால் பலமிழந்து புலிகளுக்கு பலியானார்கள்!இதே கதைதான் EPRLF இரு கட்சிகளாய் உடையு முன்பு புலிகளை வாயால் தாக்கி அவர்கள் தாக்க வரும்போது ஆதரவாளர்களை பலியாக்கி ஓடுய் ஒழிந்துகொண்டனர்!PLOT ஆரம்பத்தில் இருந்தே தீப்பொறி படுகொலை,சுழிபுர புலிகள் கொலை என போராட்டத்தை தவிர அனைத்து கொலைகளையும் செய்து போராட சென்ற தோழர்களையும் போட்டி போட்டு மாணிக்கதாசன்,சங்கிலி என கொன்று குவித்தனர்!நோக்கமான தமிழ்,தமிழருக்கு உரிமை,நாடு அனைத்தையும் மறந்து இன்றைய தமிழர் அஜித் விஜய் என்று நம்மிடம் நடித்து உழைக்கும் நடிகருக்கு அடிமைகளாய்,அவர்கள் சொல்வதற்கு அடிபணிந்து பெற்றோரை,குடும்பத்தை அவமதிக்கும் நிலை போல தமிழரை அழிந்ததை,பண்பாட்டை கொன்றதை எப்படி மறப்போம்!நல்லவர் என்று சொல்ல எவரும் நம் போராட்டத்தில் இல்லையே!முடிவு இதுதான் அதை அடைய எவ்வழி சென்றாலும் சரி என்றவர்களை ஆதரித்த தமிழ் மக்கள் மாபெரும் குற்றவாளிகள்!

No comments:

Post a Comment