Wednesday, November 8, 2017

சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!



ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் என அனைத்தும் தீருவதற்கு என்ன செய்ய வேண்டும்?

பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப்போட்டால், அதை எறும்பு தூக்கிச் செல்லும்.

அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விட்டதாக ஐதீகம். வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகராக இருந்தால், அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யலாம்.

அப்படித்தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும். எறும்பின் எச்சில் அரிசி மாவின் மீது பட்டதும் நம் கெடும் தன்மை நீங்கிவிடும்.

இப்படி எறும்புக் கூட்டில் இருந்து வருவதை முப்பத்து முக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பதாக ஐதீகம். சில நாட்கள் கழித்து கிரகநிலை மாறும்பொழுது. நம் சனி தோஷங்கள் வலு இழந்துபோய்விடும். இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப் போடவேண்டும்.
ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பேர் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள். இதனால், சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டகச்சனி – சனி மகா தசை நடப்பவர்களுக்கு, இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்பிரசாதம் ஆகும்.

http://www.canadamirror.com/astrology/04/148664

No comments:

Post a Comment