Wednesday, October 11, 2017

பிரித்தானியாவில் தங்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தவர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்!


பிரெக்சிற்றின் (Brexit) பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தவர்கள், நாடுகடத்தலுக்கு எளிதாக இலக்காகக் கூடும் அபாயம் காணப்படுவதாக உள்துறை அலுவலகத்தின் குடியேற்ற அமுலாக்க முன்னாள் சிரேஷ்ட தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்களவை விவகாரங்களுக்கான தேர்வுக் குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வளங்கள் மீதான அழுத்தம் காரணமாக, தமது விசா காலம் கடந்து தங்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தவர்கள் இவ்வாறு இலகுவாக வெளியேற்றப்படக்கூடும் என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

எனவேதான், பிரித்தானியாவில் தங்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல பாகங்களில் வசிக்கும் பிரித்தானியர்களின் எதிர்கால உரிமைகள் மற்றும் அவர்கள் எவ்வாறு சட்டத்தில் உள்வாங்கப்படுவார்கள் என்பன, நடப்பு பிரெக்சிற பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் சுட்டிக்காட்டினார்.

http://news.lankasri.com/uk/03/134293

பிரெக்சிற் தொடர்பில் மற்றொரு வாக்கெடுப்பு? பிரித்தானிய பிரதமர் தெரேசா மே

பிரெக்சிற் தொடர்பில் மற்றொரு வாக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என பிரதமர் தெரேசா மே திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பிரித்தானிய ஊடகமொன்றுக்கு பிரதமர் மே நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த செவ்வியின் போது, பிரெக்சிற் தொடர்பில் மற்றுமொரு வாக்கெடுப்பு நடத்தப்படின், நீங்கள் பிரெக்சிற்றிற்கு ஆதரவாக வாக்களிப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு தொடர்ந்து பதிலளித்த பிரதமர், ”இவ்வாறான அனுமான கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. நான் பிரெக்சிற்கு ஆதரவாக வாக்களித்திருந்தேன்.
அதன்படி, அதற்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கு, அவர்கள் கேட்டதை வழங்குவதே எனது கடமை.
இந்நிலையில், பிரெக்சிற் மீதும், சிறந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடர்பிலும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

http://news.lankasri.com/uk/03/134298

No comments:

Post a Comment