Tuesday, October 10, 2017

பெண்கள் எதற்காக வழுக்கையுள்ள ஆண்களை அதிகம் விரும்புகிறார்கள் தெரியுமா?


ஆண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகளுள் முடி உதிர்வும் ஒன்றாகும். தலை முடி உதிர ஆரம்பிக்கின்ற நாளிலிருந்தே ஆண்களின் தன்னம்பிக்கை தாழ்வு மட்டத்தில் செல்வதாக உளவியல் ஆய்வுகள் சொல்கின்றன.

ஆனால் தலை முடி உதிர்ந்து வழுக்கை விழுவது ஒரு சாதாரண உடலியல் மாற்றங்கள் தான் என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் திரும்பத்திரும்ப கேட்டுக்கொள்கின்றனர்.

இந்த நிலையில், முடி உதிர்ந்த அல்லது வழித்துக்கொண்ட ஆண்களைத்தான் பெண்கள் அதிகமாக விரும்புவது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு பெண்களே முன்வந்து தமது விருப்பத்திற்கான காரணங்களை முன்வைத்திருக்கிறார்கள்.

அவற்றைப் பார்ப்பதற்கு முன்னர், முடி உதிர்வு தொடர்பாக அமெரிக்க முடி பராமரிப்பு அமைப்பு ஒன்று முன்வைத்துள்ள ஆய்வுக்கருத்தினை இங்கே சொல்லவேண்டும்.

அதாவது, தற்போதைய தலைமுறையில் முப்பத்தைந்துக்கும் ஐம்பது வயதுக்கும் இடைப்பட்ட ஆண்களை முடி உதிர்வானது 85 சதவீதம்வரை ஆட்கொண்டுவிடுவதாக கண்டறிந்துள்ளது. இதற்கு காரணமாக தற்போதைய மாறிவரும் சூழ் நிலைக்கேற்ப வாழ்வியற்பண்புகள் மற்றும் மன அழுத்தங்கள் போன்றன முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் வழுக்கையான ஆண்கள் பெண்களை மிகவும் கவர்ந்துவிடுகிறார்கள் என்று ஆய்வு முடிவொன்று சொல்கிறது.

ஒரு பெண் தான் விரும்பிப் பார்க்கும் ஆணைப் பார்க்கின்றபோது முதலாவதாக அவனது தலைமுடியைத்தான் பார்க்கிறாள். இதன் பின்னர் கண்களை நோட்டமிடுகிறாள். தலைமுடியைப் பார்ப்பதற்கு செலவிட்ட நேரமானது கண்களைப் பார்ப்பதற்கு கிடைப்பதில்லை. இதனால் அரைகுறையாக தனது பார்வையை முடித்துக்கொள்கிறாள்.

ஆனால் தலையில் முடியில்லாமல் வழுக்கையாக இருக்கும் ஆணைப் பார்க்கின்றபோது நேரடியாக கண்களுக்கே வருகிறாள். அதன்போது ஆணின் கண்ணில் தனது இரசனையின் படிமங்களைத் தொலைக்கிறாள். இதனால் அந்த ஆணை அவளுக்கு நன்றாகவே பிடித்துப்போகிறது என்று சொல்லப்பட்டுள்ளது.

வழுக்கையுள்ள ஆண்மகனை, மிகவும் திடகாத்திரமான ஆண்மகனாக பெண்கள் பார்க்கின்றனர். அவர்கள் ஆண்மையிலும் செயற்பாட்டு வேகத்திலும் வீரியத்தன்மைகொண்டு விளங்குவதாக நோக்குகின்றனர்.

பெண்களின் இந்தக் கருதுகோளுக்கு ஆணின் மண்டையோட்டு அமைப்பு முறையும் செல்வாக்குச் செலுத்துவதாகச் சொல்லப்படுகிறது. அதாவது நன்றாக மொட்டையாயுள்ள ஆணின் தலையில் மண்டையோட்டின் வாழிப்பான படிமம் காணப்படும். இந்தப் படிமமானது ஆண் குறித்த பெண்ணின் திடகாத்திர நினைப்பிற்கு உந்துதலாக விளங்குகின்றது.

இதனாலேயே மொட்டையாயுள்ள ஆண்கள் வெகு இலகுவாக பெண்களைக் கவர்ந்துவிடுவதாக ஆய்வுகள் முடிவு கூறியுள்ளன.

இந்த முடிவுகளைவைத்து தலைமுடியோடு உள்ளவர்கள் தமது அழகான முடியை வழிப்பதற்கு முனையக்கூடாது. நாளும் பார்த்த ஒரு ஆணின் தலையில் திடீரென்று மொட்டையைப் பார்ப்பது பெண்களுக்கு சலிப்பினையே ஏற்படுத்தும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

http://www.manithan.com/gossip/04/144544?ref=rightsidebar-lankasrinews

No comments:

Post a Comment