Sunday, August 13, 2017

டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு சுமத்தும் பாடகர் உன்னிக்கிருஸ்ணனுக்கு யாழில் எதிர்ப்பு! இசை நிகழ்ச்சி ரத்து


பிரபல தென்னிந்தியப் பின்னணிப் பாடகர் உன்னிக்கிருஸ்ணனின் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்னிந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகரின் இசை நிகழ்ச்சி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் அவருக்கு எதிராக அங்கு சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தமையை அடுத்து அந்த இசை நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மீது அவதூறு சுமத்தும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறிய உன்னிக்கிருஸ்ணன் எங்கள் மண்ணில் இன்னிசை பாட முடியாது என அந்த சுவரொட்டியில் எழுதப்பட்டுள்ளது.
மேலும், அதில், உன்னிக்கிருஸ்ணன் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டியில் உன்னிக்கு எதிர்ப்பு. யாழ். மக்கள் என்று போடப்பட்டுள்ளது.
உன்னிக்கிருஸ்ணனும், உத்ரா உன்னிக்கிருஸ்ணனும் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர்.
எனினும் இந்த எதிர்ப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டதை அடுத்து குறித்த இசை நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/community/01/155080

No comments:

Post a Comment