கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்ப்ட்டு காணாமல் போகச் செய்யப்ப்ட்ட சம்ப்வம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவு முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு சிறப்பு அறிக்கை ஊடாக நேற்று அறிவித்தது.
மேலும் இந்த கடத்தல், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படை முன்னாள் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க உள்ளிட்ட 7 பேரில் விளக்கமறியலில் இருந்துவரும் அறுவரின் விளக்கமறியல் காலத்தை எதிர்வரும் 10 ஆம் திகதிவரை கோட்டை நீதிமன்றம் நீடித்தது.
அத்துடன் கைது செய்வதற்காக தேடப்பட்டுவரும் கடற்படை லெப்டினன் கொமாண்டர் பிரசாத் ஹெட்டி ஆரச்சியைக் கைது செய்ய மீளவும் உத்தரவிட்ட நீதிமன்றம் பிடியாணை உத்தரவை அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்குமாறும் ஆலோசனை வழங்கியது.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்ப்ட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு நேற்று கோட்டை நீதிவான் லங்க அஜயரத்ன முன்னிலையில் மீளவும் விசாரணைக்கு வந்தது.
முன்னாள் கடற்படை தளபதி, வசந்த கரண்ணாகொட தனது பாதுகப்பு உத்தியோகத்தராக இருந்த லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்கவுக்கு எதிராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த மேலதிக விசாரணைகளிலேயே இந்த கடத்தல் விவகாரம் அம்பலத்துக்கு வந்ததிருந்தது.
புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நாகஹமுல்லவின் வழிகாட்டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சானி அபேசேகரவின் நேரடி கட்டுப்பாட்டில் புலனாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா தலைமையில் முன்னெடுக்கப்படும் இருவேறு விசாரணைகளில் இந்த பிரதான கடத்தல்கள் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
கொழும்பு, கொட்டாஞ்சேனை, தெஹிவளை, வத்தளை மற்றும் கட்டுநாயக்க உள்ளிட்ட பல பிரதேசங்களில் பல்வேறு உத்திகளை கையாண்டு இந்த கடத்தல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக தெஹிவளையில் 2008.09.17 அன்று பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்பவரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஸ்வரன் ராமலிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாணவர்களும் கடத்தப்பட்டிருந்தனர். இதனைவிட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையை சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆராச்சி, திருகோணமலையை சேர்ந்த தியாகராஜா கஜன் உள்ளிட்டோரும் கடத்தப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய வதை முகாமான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப் புலனயவாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த விடயம் சர்வதேச அளவில் அவதானிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், சிறப்பு புலனாயவுப் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன் கொமான்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமாண்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, கடற்படை சிப்பாய் லக்ஷ்மன் உதயகுமார, நலின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக தர்மதாஸ , கித்சிரி மற்றும் சிரப்பு புலனயவுப் பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த கொமாண்டர் டி.கெ.பி. தஸநாயக்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் சம்பத் முனசிங்க பிணையில் உள்ள நிலையில் ஏனையோர் தொடர்ந்து விளக்கமறியலில் இருந்து வருகின்றனர். நேற்றைய விசாரணைகள் ஆரம்பமான போது சந்தேக நபர்கள் மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்த நிலையில் 7 ஆவது சந்தேக நபரான டி.கே.பி. தசநாயக்க மட்டும் மன்றில் ஆஜராகி இருக்கவில்லை. அவர் வெலிசறை கடற்படை வைத்தியசாலையில் சிறைக்காவலர்களின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சைப் பெறுவதாக இதன் போது சிறை அதிகாரிகளால் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
சந்தேக நபர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அசித் சிறிவர்தனவின் கீழ் சட்டத்தரணிகள் குழு மன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில், குற்றப் புலனாயவுப் பிரிவின் சார்பில் பிரதான விசாரணை அதிகாரி யாழ். மாணவி வித்தியா கொலை வழக்கில் சாட்சியம் வழங்க சென்றிருந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனசிங்க, உப பொலிஸ் பரிசோதகர் உபாலி, உப பொலிஸ் பரிசோதகர் பீ.எச். உபாலி, ஆகியோர் மன்றில் மேலதிக விசாரணை அறிக்கையுடன் ஆஜராகினர்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன மன்றில் பிரசன்னமானார். இதன்போது மன்றில் சிறப்பு அறிக்கையை சமர்பித்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனசிங்க மன்றில் கருத்துக்களை முன்வைத்தார்.
' கனம் நீதிவான் அவர்களே, கடந்த தவணையின் போது 2ஆம், 3 ஆம் சந்தேக நபர்களுக்கு எதிராக கப்பம் கோரியமை தொடர்பில் சாட்சிகள் உள்ளதா என வினவப்பட்டது. இதுவரையிலான விசாரணையில் அவ்வாறான சாட்சிகள் இல்லை. எனினும் அவர்களுக்கு எதிரான விசாரணைகள் தொடர்கின்றன.
பந்து குமார என்பவர் தன்னிடம் கப்பம் கோரியதாக ஊடகவியலாளர் சந்திப்பில் பாதிக்கப்ப்ட்ட தரப்பு தாய் ஒருவர் தெரிவித்த விவகாரம் தொடர்பில் நாம் அவரிடம் வாக்கு மூலம் பெற்றோம். இதன் போது பந்து குமாரவின் பெயரை தான் தவறுதலாக தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.
3, 4 ஆம் சந்தேக நபர்களுக்கு எதிரான எதிர்கால விசாரணைகள் தொடர்பில் கடந்த தவணை கேள்வி எழுப்பட்டது. அவர்களுக்கு எதிராக மட்டுமன்றி அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராகவும் விசாரணைகள் தொடர்கின்றன.
இதுவரை வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த தவணை விசாரணையின் பின்னர் நாம் பதிவு செய்த முக்கிய வாக்கு மூலம் ஒன்றூடாக சில விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கடற்படையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ன்ட அதிகாரியான ரியர் அத்மிரால் ரீ.ஜே.எல். சின்னையாவிடம் நாம் வாககு மூலம் பெற்றோம். இதன் போது அவர் முக்கிய சில தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்படுவதாக கூறப்படும் திருமலையில் உள்ள கன்சைட் முகாமின் 1,2 ஆம் இலக்க சிறைக் கூடங்களில் என்ன நடக்கிறது என்பது முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட, டி.கே.பி. தஸநாயக்க, லெப்டினன் கொமாண்டர் ரணசிங்க, லெப்டினன் கொமான்டர் பண்டார ஆகியோரே அறிந்திருந்தனர். வேறு எவருக்கும் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாது என அவர் வககு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரம் கைது செய்ய தேடப்பட்டு வரும் லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சியை கைது செய்ய நாம் பல விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம். தற்போது அவரது நண்பர்கள், உரவினர்கள் மீது எமது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. யாரேனும் அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனரா என ஆராய்ந்து வருகின்றோம்.
இந்த விடயத்தில் இன்னும் யாரெல்லாம் கைது செய்யப்பட போகிறார்கள் என்பதை பிரதான விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவுக்கே தெரியும். எனவே அவர் மன்றில் ஆஜராகி அது தொடர்பில் அடுத்த தவணை அறிவிப்பார்' என பிரதான பொலிச் பரிசோதகர் ரஞ்சித் முனசிங்க தெரிவித்தார்.
இதனையடுத்து சந்தேக நபர்களின் சட்டத்தரணி அசித் சிறிவர்தனவும் மற்றொருவரும் மன்றில் கருத்துக்களை முன்வைத்தனர். குற்றப் புலனாயவுப் பிரிவு பக்கச் சார்பாக நடந்துகொள்வதாகவும் உபுல் பண்டார, பந்து குமார உபுல் சமிந்த ,காமினி. மென்டிஸ், வெலகெதர உள்ளிட்ட சிலர் இக்கடத்தலுடனும் கப்பம் கோரிய சம்பவம் தொடர்பிலும் தொடர்புபட்டு இருந்தும் அவர்களை குற்றப் புலனாயவுப் பிரிவு கைது செய்யவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் குற்றப் புலனாயவுப் பிரிவு பக்கச் சார்பானது என்பதை அதன் பொறுப்பதிகாரி ரஞ்சித் முனசிங்க மறுத்தார்.
சாட்சிகளின் அடிப்படையிலேயே கைதுகள் இடம்பெற்றுள்ளதாகவும், விசாரணை நிறைவடையாத நிலையில் மேலும் நபர்கள் இருப்பின் கைது செய்யப்படுவர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விரிவான விசாரணைகளை செய்து சந்தேக நபர்கள் யாராக இருப்பினும் அவர்களைக் கைது செய்யுமாறு நீதிவான் லங்க ஜயரத்ன ும் அவர் சுட்டிக்காட்டினார்.
விரிவான விசாரணைகளை செய்து சந்தேக நபர்கள் யாராக இருப்பினும் அவர்களைக் கைதுப் செய்யுமாறு நீதிவான் லங்க ஜயரத்ன குற்றப் புலனயவுப் பிரிவுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதனையடுத்து மன்றில் கருத்துக்களை முன்வைத்த சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, சந்தேக நபர்கள் தற்போது ஒவ்வொருவரின் பெயராக கூறுவதாகவும், அவர்கள் உண்மையில் குற்றத்துடன் தொடர்புபட்டிருப்பின் அதிகாரம் இருந்த போது அவர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். தற்போது சந்தேக நபர்கள் சிக்குண்டுள்ள நிலையில் மூக்கு வரை நீர் மட்டம் வந்ததும் வேறு வழியின்றி ஒவ்வொருவரின் பெயரைக் கூறிவருவதாகவும் எவராக இருந்தாலும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வாதிட்டார்.
இதனையடுத்து குறித்த வழக்கை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்தி வைத்து அதுவரை தசநாயக்க உள்ளிட்ட 6 பேரின் விளக்கமறியலை நீடித்தார்.
http://www.canadamirror.com/srilanka/04/134582
No comments:
Post a Comment