Wednesday, August 16, 2017

சொல்லாதீர்கள் ...!!இந்தியாவில் சு தந்திரமாம் !?

Vaith Srirasavarothayan
*பாரதியிடம்* சொல்லாதீர்கள் ...!!
பொந்திலே அவன் வைத்த அக்கினி குஞ்சுகள் பொசுங்கிப் போனதென்று . . !!
பாவம் !
அந்த யானையிடம் மீண்டும் மிதி வாங்க ஏங்குவான் ..!
😢
ஆங்கிலேயன் முன்னால் சட்டை அவிழ்த்து முடிஞ்சா சுடுடா என்று நெஞ்சை காட்டிய *ஜீவாவிடம்* சொல்லாதீர்கள்...!
நாங்கள் வார்டு கவுன்சிலரைக் கூட
எதிர்க்கத் துணியவில்லை என்று !
பாவம் நிமித்திய நெஞ்சை குறுகி மடிவான் . . 😢
*மனுநீதி சோழனிடம்* சொல்லாதீர்கள்...!
நாங்கள் நீதியற்று சாகிறோமென்று ! பாவம் !
மறு சக்கரத்தில் அவனும் படுத்து உயிர் விடுவான் !😢
*வேலுநாச்சியிடம்* சொல்லாதீர்கள்...!
எங்கள் பெண்கள் சித்திரவதை படுவதை,
பாவம் ! ஏந்திய வாளை உறையில் வைத்துவிட்டு குமுறி
அழுவாள் . . 😢
மாமன்னர் *ஒண்டிவீரனிடம்* சொல்லாதீர்கள்...!
நாங்கள் வெளிநாட்டுக்காரனுக்கு இரவு பகலாக வேலை செய்கிறோமென்று !
பாவம் ! சமரசமில்லாமல் வெள்ளையனை போரிட்டு எதிர்தவன், சாக உச்சிமலை தேடுவான் . . !😢
*ராச ராசனிடம்* சொல்லாதீர்கள்....!
நாங்கள் அரேபிய மன்னர்களுக்கு அடிமையாக வேலை பார்கிறோமென்று !
பாவம் ! பெரிய கோயில் உச்சியிலிருந்து குதித்து மாண்டுபோவான் . . !😢
*கட்ட பொம்மனிடம்* சொல்லாதீர்கள்...!
நாங்கள் வெளிநாட்டு கம்பெனிக்கு கப்பம்
கட்டுகிறோமென்று, பாவம் !
மீண்டும் ஒருமுறை தூக்கில் தொங்கிடுவான் . . !😢
*சேதுபதியிடம்* சொல்லாதீர்கள்...!
நாங்கள் கடலில் சுடுபட்டு சாகிறோமென்று,
பாவம் ! நடுக் கடலில் குதித்து சாவான் . .! 😢
*வ.உ.சி யிடம்* சொல்லாதீர்கள்....!
நாங்கள் அடிமையாய் வாழ்கிறோமென்று, பாவம் !
செக்கை தலையில் போட்டு கொண்டுமடிவான் . . !😦
உங்கள் *பிள்ளைகளிடம்* சொல்லுங்கள்....
நாம் அடிமை வர்க்கமில்லை என்று !
பாவம் அவர்கள் சுதந்திரமடையட்டும் . . . 
பிரபாகரனிடம் சொல்லாதீர்கள்
இங்கே இலங்கைத் தமிழரை வைத்து
கட்சிகள் அரசியல் செய்வதை
இந்தியாவில் சு தந்திரமாம்
சுதந்திர தின வாழ்த்தை எப்படி சொல்வதென்ற சிந்தனையோடு. . .
கேட்கிறேன்
அப்படீன்னா ,,என்னாது அது?

No comments:

Post a Comment