Saturday, August 12, 2017

5700 ஆண்டுகள் சார்ஜ் செய்ய தேவையில்லை! புதுவகை பற்றரி கண்டுபிடிப்பு

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் நபர்களின் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று பற்றரி தீர்ந்து போவது தான்.
இந்நிலையில் பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் 5700 ஆண்டுகள் ரீசார்ஜ் செய்ய அவசியமில்லாத செல்போன் பற்றரியை கண்டறிந்துள்ளனர்.
அணுசக்தி கழிவுகளில் இருந்து செயற்கை வைரத்தை உருவாக்கிய விஞ்ஞானிகள், அதிலிருந்தே சுமார் 5700 ஆண்டுகள் ரீசார்ஜ் செய்யாமல் பயன்படுத்தப்படக்கூடிய செல்போன் பற்றரியை கண்டறிந்துள்ளனர்.
இதன்மூலம் விண்கலம், செயற்கைகோள் மற்றும் விமானங்களின் பயணக் காலத்தை நீட்டிக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
http://news.lankasri.com/othertech/03/130530

No comments:

Post a Comment