Friday, July 28, 2017

கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து நான்கு ஈழத் தமிழர்கள் விடுதலை


கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து நான்கு ஈழத் தமிழர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எம்.வி.ஓசியன்லேடி என்ற கப்பல் மூலம் 2009 ஆம் ஆண்டு 76 இலங்கையர்களை கனடாவுக்கு அழைத்துச் சென்றமைக்காக இவர்கள் மீது ஆட்கடத்தல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
ஃப்ரான்சிஸ் அந்தோனிமுத்து அப்புலோனப்பா, ஹமல்ராஜ் ஹந்தசாமி, ஜயசந்திரன் கனகராஜ் மற்றும் விக்னராஜா தேவராஜா ஆகிய நான்கு பேருக்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு கனடாவின் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.
எனினும் இவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசத் தரப்பு சட்டத்தரணி தவறி இருப்பதாக உயர் நீதிமன்ற நீதியரசர் தெரிவித்துள்ளார்.
குறித்த நான்கு பேரும் ஆட்கடத்தல் காரர்கள் அன்றி அகதிகளே என்றும், ஏனையவர்களுக்கு உதவியளித்துள்ளமையை ஆட்கடத்தல் என்று கூறுவதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து குறித்த நான்கு பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
http://www.canadamirror.com/canada/04/133661

No comments:

Post a Comment