Saturday, July 29, 2017

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: கோடீஸ்வர கணவன் செய்த விபரீத செயல்..

மனைவிக்கு வேறு ஆணுடன் தொடர்பு இருப்பதாக எண்ணி கணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Dorset கவுண்டியை சேர்ந்தவர் Phil Smith (52), இவரின் இரண்டாவது மனைவி Violetta.
இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர், மிகப்பெரிய தொழிலதிபரான Smith பல கோடிகளுக்கு அதிபராக இருந்துள்ளார்.
Smithக்கு திடீரென மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது, Violetta வேறு ஆணுடன் பேசி கொண்டிருப்பதை பார்த்து பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
இதையடுத்து மனம் கலங்கிய நிலையில் இருந்து வந்த Smith, மனைவி குறித்த விடயத்தை தனது மூத்த மகளான Khiannaவிடம் கூறியுள்ளார்.
பிறகு வீட்டிலிருந்து வெளியேறிய Smith தன்னுடைய நண்பர்களை சந்தித்து விட்டு தனது பண்ணை வீட்டுக்கு தனியாக சென்றுள்ளார்.
அங்கு துக்கம் தாங்காமல் Smith கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தற்போது தான் வெளியில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து விசாரித்து வரும் அதிகாரி Rachael Griffin கூறுகையில், Smith அன்பானவராக இருந்தாலும் வீட்டில் அவருக்கு பிரச்சனை இருந்துள்ளது.
தற்கொலை செய்ய போவதை குறித்து முன்னரே அவர் யாரிடமும் தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார்.
இறப்பதற்கு முன்னர் செல்போனில் குடும்பத்தாருக்கு Smith மெசேஜ் அனுப்பியுள்ளதும் தெரியவந்துள்ளது.
Smith-ன் மனைவி Violetta கூறுகையில், நான் வேறு ஆணுடன் தொடர்பு வைத்து கொள்ளவில்லை. தன் கணவரே இப்படியான கற்பனையை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
இது சம்மந்தமாக எங்களுக்குள் தகராறு வரும் என கூறிய Violetta, ஒரு சமயம் நாங்கள் விவாகரத்து செய்ய முடிவெடுத்து பின்னர் முடிவை மாற்றி கொண்டோம் என கூறியுள்ளார்.
Khianna கூறுகையில், Violetta-வை வேறு ஆணுடன் சேர்ந்து பார்த்ததாக என் தந்தை என்னிடம் கடந்த ஜனவரி 31ஆம் திகதி அழுது கொண்டே கூறினார்.
இதையடுத்து Violetta உடனான வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக நினைத்த என் தந்தை விவாகரத்து தொடர்பாக வழக்கறிஞரிடம் பேச சென்றார்.
அதன் பின்னர் இப்படியொரு சோகமான முடிவை எடுத்துள்ளார் என Khianna கூறியுள்ளார்.
http://news.lankasri.com/uk/03/129655

No comments:

Post a Comment