தோற்றம் : 23 யூன் 1948 — மறைவு : 16 யூலை 2017
(உரிமையாளர், விஸ்னுவிலாஸ், Balmoral Food & wine WHS Smith Local Surbiton)
யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி வேல்வீதியை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து Roermond, லண்டன் Tolworth ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசமலர் அர்ச்சுனராஜா அவர்கள் 16-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், நாகபராசக்தி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அர்ச்சுனராஜா(பிரபலவர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கேசவராஜா(கேசவன்- லண்டன்), சுரேஸ்குமார்(சுரேஸ்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கருணம்பாள் கந்தையா அவர்களின் அருமைச் சகோதரியும்,
அமராவதி, பிரேமாதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆசைமயில், புவனேஸ்வரி, பரமேஸ்வரி, இராசேஸ்வரி, கனகேஸ்வரி, நாகேஸ்வரி, கமலேஸ்வரி, காலஞ்சென்ற விமலேஸ்வரி மற்றும் சிவராசா(நெதர்லாந்து), கனி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்வராசா வேலம்மா தம்பதிகள், பரமநாதன் இந்திராதேவி தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
விஸ்னுஜன், தர்சிகன், கபினுஜன், தனுஸ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|
No comments:
Post a Comment