பிறப்பு : 12 யூலை 1942 — இறப்பு : 26 யூன் 2017
யாழ். கொக்குவில் தாவடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசநாயகம் பொன்னாபரணம் அவர்கள் 26-06-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை செல்லம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசநாயகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற பாஸ்கரன், மற்றும் இராசவதனி(லண்டன்), ரசீகரன்(கனடா), இராசநாயகி(செல்வி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, இராசதுரை, சரஸ்வதி, இரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
குகதாசன்(லண்டன்), சுமங்கலா(கனடா), மயூரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், மற்றும் இராசலட்சுமி, மனோண்மணி, காலஞ்சென்ற செல்லத்துரை, மற்றும் புனிதவதி, காலஞ்சென்ற சம்பந்த சரணாலயம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
தக்சிகா, சேந்தன், விஷால், வைசாலி, தக்சா, அபிசாயினி, கிருசங்கவி, சிவானுயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-06-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
http://www.kallarai.com/ta/obituary-20170627215938.html
No comments:
Post a Comment