இந்திய சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா இதை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து சட்டப் பேரவையில் வி.சரோஜா கருத்து தெரிவிக்கையில்,
“மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் திருமண உதவித் தொகையுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கும் திட்டத்தை 2011 - 2012ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள தகுதியான முகாம் வாழ் இலங்கை தமிழ் பெண்களுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிடப்பட்டது.
தற்போது, இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் திருமண நிதி உதவித் தொகையுடன் சேர்த்து திருமாங்கல்யம் செய்திட 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ் நாட்டில் உள்ள தகுதியான முகாம் வாழ் இலங்கை தமிழ் பெண்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவு படுத்தப்படும்.
54 ஆயிரத்து 439 அங்கான் வாடி மையங்களுக்கு ரூ.1 கோடியே 40 இலட்சத்தில் சுகாதாரப் பைகள் வழங்கப்படும்.
மகளிர் நலனுக்கென தொழில்நுட்ப வசதியுடன் கூடிய சமுதாய உதவி மையம் ரூ.1 கோடியில் அமைக்கப்படும். குழந்தை பராமரிப்பு நிறு வனங்களில் உள்ள குழந்தை களை ஆக்கப்பூர்வமான குடிமக்களாக்க உளவியல் வாழ்வரங்கம் உருவாக்கப்படும்.
19 ஆயிரத்து 230 சத்துணவு மையங்களுக்கு பிரஷர் குக்கர் மற்றும் 12 ஆயிரம் மையங்களுக்கு புதிய சமையல் உபகரணங்கள் ரூ.10 கோடியே 80 லட்சத்தில் வழங்கப்படும். என குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/india/04/129512
No comments:
Post a Comment