அன்னை மடியில் : 23 யூன் 1959 — ஆண்டவன் அடியில் : 15 மே 2017
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட தயாநிதி சண்முகநாதன் அவர்கள் 15-05-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானசம்பந்தன்(அதிபர்) அன்னலட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம்(அதிபர்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருத்திகன்(CEO of Woodtimes), கார்த்திகன்(CEO of Woodtimes), அனந்தீசன்(BSc. Honors) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவானந்தன், குகானந்தன்(ஜெர்மனி), கலாநிதி(இத்தாலி), காலஞ்சென்ற கருணாநிதி, அருணாநிதி(கனடா), உஷாநிதி(ஜெர்மனி), சொர்ணநிதி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மனோரமா(ஜெர்மனி), உதயகுமார்(இத்தாலி), விஜிகரன்(கனடா), யோகலிங்கம்(ஜெர்மனி), சந்திரசேகரம், சதாசிவம், நீலாம்பிகை, லலிதாம்பிகை, யோகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சோதிப்பிரியா, வலென்டினோ, மகிஷா, கோபிஷன், நிருஷான், அபிதா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
வைஷ்ணவி, விஷ்ணவி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
விஜி |
http://www.kallarai.com/ta/obituary-20170515215647.html
No comments:
Post a Comment