வாக்காளர் தேருநர் இடாப்புகளின் திருத்தப் பணிகள் தற்போது நாட்டின் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் ஆரம்பமாகியுள்ளன. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் கிராம சேவகர்கள் மூலமாக குடியிருப்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 1999 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்த அனைவரும் புதிய வாக்காளர்களாக தம்மை பதிவு செய்து கொள்ள முடியும். எனவே இது விடயமாக கூடிய ஈடுபாட்டுடன் செயற்படுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
சப்ரகமுவ மாகாணத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதில் சிரத்தைக் காட்டுவதில்லை என சுட்டிக்காட்டிய அவர் வாக்குரிமையின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
எதிர்காலத்தில் பல தேர்தல்களை நாடு சந்திக்கவுள்ள நிலையில் ஒவ்வொருவரும் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதுடன், வீட்டில் வசிப்போரில் புதிய வாக்காளர்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment