இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது
நெல்லியடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்னாலை வேம்படிச் சந்திப் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வொன்றின்போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில், வடமராட்சி துன்னாலை பகுதியில் உள்ள இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இரு குழுக்களாக பிரிந்து அவர்கள் அங்கு மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு, சுமார் 500 இற்கும் மேற்பட்ட கண்ணாடி சோடாப் போத்தல்கள், கற்கள் போன்ற பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், சிலர் வாள்கள் மற்றும் கம்பிகளை வைத்திருந்ததாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர்.
இதன் போது அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருவதை அறிந்த குறித்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதன் போது இரு குழுக்களிலும் படுகாயமடைந்த 7 பேர் மந்திகை வைத்தியசாலையிலும், 4 பேர் பருத்திதுறை வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்து வாள், கம்பிகள் மற்றும் உடையாத சோடாப் போத்தல்கள் போன்றவை பொலிஸாரால் மீட்கப்பட்டன.
மோதல் இடம்பெற்ற பகுதியிலுள்ள வீதியில் கண்ணாடியிலான சோடாப் போத்தல்கள் உடைக்கப்பட்டு வீதி, கண்ணாடித் துண்டுகளால் நிரம்பிக் காணப்பட்டது.
இதன் காரணமாக பொலிஸாரின் வாகன சில்லு ஒன்று சேதமடைந்து காற்று போனமை குறிப்பிடத்தக்கது.
இம்மோதலால் பாதிக்கப்பட்ட அந்த வீதியை பொலிஸார் அறிவுறுத்தலில் நேற்றிரவு துப்பரவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கு பொதுமக்களும் தமது ஒத்துழைப்பக்களை வழங்கினர்.
குறித்த தாக்குதலை தொடர்ந்து நெல்லியடி பருத்தித்துறை மற்றும் வல்வெடித்துறை பொலிஸார் இணைந்து நேற்று இரவு முழுவதும் மோதல் இடம்பெற்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
நேற்று நள்ளிரவு 12 மணிவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. பொலிஸார் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment