Friday, December 23, 2016

பல லட்சம் பேரை கண்ணீர் விட வைத்த ஒரே ஒரு புகைப்படம்!!

கென்யா நாட்டில் மருத்துவமனைக்குச் செல்லும் போது நோயாளி ஒருவர், போக்குவரத்திற்கு மத்தியில் சிக்கிக் கொண்ட போது, பிச்சைக்கார சிறுவன் ஒருவன் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கென்யா நாட்டின் தலைநகரமான Nairobi என்ற பகுதியில் Gladys Kamande என்ற நோயாளி காரில் ஆக்ஸிஜன் மாஸ்க் மற்றும் கழுத்தில் பேண்ட் என போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு செல்வதற்காக சென்றுள்ளார்.
அப்போது அப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக Gladys Kamande கார் செல்வதற்கு சற்று தாமதமாகியுள்ளது.
அதுமட்டுமின்றி குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவரை சந்திக்க வேண்டும், அதுமட்டுமின்றி போதிய பணம் இல்லை என்று கண்ணீர் சிந்தியுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் வழக்கமாக பிச்சை எடுக்கும் சிறுவன் பிச்சை எடுப்பதற்காக அந்த சாலையில் சென்று கொண்டிருந்த போது, இவர்கள் இருந்த கரையும் பார்த்துள்ளான்.
அப்போது அவர் படும் வேதனையைக் கண்ட அச்சிறுவன் இவர்களால் வேகமாக மருத்துவனைக்கு செல்ல முடியவில்லையே, பணம் வேற இல்லாமல் கஷ்டப்படுகிறார்களே என்று மனம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதுள்ளான்.
இதைக் கண்ட அங்கிருந்த சிலர் அச்சிறுவனை சமாதானப்படுத்தியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் Gladys Kamande குடும்பத்தார் இதுவரை அவருடைய மருத்துவ செலவாக 54, 500 பவுண்ட் வரை செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.boy-crying01

- See more at: http://www.canadamirror.com/canada/76896.html#sthash.7WSLb2Nk.EGweOq5T.dpuf

No comments:

Post a Comment