Thursday, November 10, 2016

காதலனால் நண்பர்களுக்கு இரையாக்கப்பட்ட 15 வயது சிறுமி…. என்ன நடந்தது தெரியுமா?


டெல்லியில் 15வயது சிறுமி 7 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி பஹர்கன்ஜ் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ரேஹன் என்ற 15 வயது சிறுமி தனது காதலன் மற்றும் அவனது நண்பர்கள் 6 பேரால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸில் புகார் அளித்த அந்த பெண், முதலில் தனது காதலன் மட்டும் கற்பழித்ததாக தெரிவித்தார், பிறகு அவருடன் சேர்ந்து 2 பேர் தன்னை கற்பழித்ததாக கூறினார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் தன் காதலன் சினிமாவிற்கு அழைத்து செல்வதாக கூறி தன்னை ஹோட்டலுக்கு அழைத்து சென்றான் என்றும் , அங்கு அவனது நண்பர்கள் தனக்கு கூல் டிரிங்ஸில் மயக்க மாத்திரை கலந்துகொடுத்தாகவும் தெரிவித்தார்.
காதலனோடு சேர்த்து மொத்தம் 7 பேர் அந்த அறையில் இருந்ததாகவும், ஒருவர் மாறி ஒருவர் தன்னை கற்பழித்ததாகவும் அவர் கூறினார்.புகாரை ஏற்று கொண்ட போலீஸார், மூன்று பேரை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
- See more at: http://www.manithan.com/news/20161109122690#sthash.ah6VZim2.dpuf

திருமணமான 4 நாட்களில் கணவனை விட்டு காதலனை 2-வது திருமணம் செய்த புதுப்பெண்.!!

குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையை சேர்ந்தவர் ராமு, கூலி தொழிலாளி. இவருடைய மகள் துர்கா (வயது 21), பி.எஸ்சி., பட்டதாரி. இவருக்கும் குடியாத்தம் பிச்சனூர் பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும் கடந்த 2-ந் தேதி குடியாத்தம் நெல்லூர்பேட்டை பாவோடும்தோப்பு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. மணமகன் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதிகள் உறவினர் களுடன் நேர்த்திக்கடன் செலுத்த திருப்பதிக்கு சென்றனர். அதன்பின்னர் பிச்சனூரில் உள்ள மாப்பிள்ளையின் வீட்டிற்கு அனைவரும் வந்தனர். மறுவிருந்துக்காக கடந்த 6-ந்தேதி காலையில் துர்காவின் பெற்றோர் வீட்டிற்கு புதுமண தம்பதியினர் சென்றனர்.
இந்த நிலையில் அன்று மாலையில் பெற்றோர் வீட்டில் இருந்த துர்காவை திடீரென காணவில்லை. துர்கா அக்கம்பக்கத்தில் உள்ள தோழிகள் வீட்டுக்கு சென்றிருப்பார் என வீட்டில் உள்ளோர் நினைத்திருந்தனர். ஆனால் வெகுநேரமாகியும் துர்கா வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், துர்காவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்திலும், தோழிகள் வீட்டிலும் விசாரித்துள்ளனர். இருப்பினும் துர்கா குறித்த எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து துர்காவின் பெற்றோர் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மதியரசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிரிஜா, வஜ்ஜிரவேலு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன புதுப்பெண் துர்காவை தேடி வந்தனர்.
ஏற்கனவே துர்காவுக்கும், குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை தண்டபாணி கோவில் தெருவை சேர்ந்த காசிலிங்கம் மகன் கேசவனுக்கும் (24) இடையே கடந்த ஆண்டு குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவின் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
காதலனை மறக்க முடியாத துர்கா கடந்த 6-ந் தேதி தாய் வீட்டில் இருந்து மாலையில் வெளியேறி காதலன் கேசவன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து இருவரும் திருப்பதிக்கு சென்று 7-ந் தேதி காலையில் திருமணம் செய்துள்ளனர். பின்னர் பரதராமி அருகே உள்ள வீரிசெட்டிபல்லி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது போலீசாரும், உறவினர்களும் தங்களை தேடுவதை அறிந்த அவர்கள் நேற்று மாலை குடியாத்தம் வந்துள்ளனர். அப்போது குடியாத்தம் புதிய பஸ்நிலையம் அருகே போலீசார் அவர்களை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த துர்காவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்நிலையத்திற்கு வந்தனர். அப்போது துர்கா போலீசாரிடம் தனது காதலனை திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன்தான் வாழ்வேன் என கூறினார். இதனையடுத்து அவர்களை போலீசார் குடியாத்தம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- See more at: http://www.asrilanka.com/2016/11/09/35192#sthash.bNISgvud.dpuf

No comments:

Post a Comment