யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நல்லையா ரவீந்திரா அவர்கள் 04-06-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மானந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ராகவி அவர்களின் பாசமிகு தந்தையும்,
தேவேந்திரா(கனடா), மகேந்திரா(இலங்கை), சாந்தினி(ஆசிரியை- இலங்கை), மதிவதனி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாலினி(கனடா), பத்மரஞ்சினி(இலங்கை), ஜெயசீலன்(இலங்கை), சிவதாசன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தேவேந்திரா பிள்ளைகள், இமாஜினி, பவாஜினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தீபிகா, சிந்து, பானு, லக்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-06-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment