Tuesday, April 5, 2016

31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்( அமரர் மாலதி ஜெகநாதன்)

பிறப்பு : 30 செப்ரெம்பர் 1996 — இறப்பு : 7 மார்ச் 2016

நெதர்லாந்து Den Haag ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாலதி ஜெகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
குலம் தழைக்க வந்த குல கொழுந்தே!
தவழ்ந்து வந்த தாய் மடிதனையும்
அணைத்து வளர்த்த தந்தையையும்
சூழ்ந்திருந்த உறவுகளையும்
ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டாயோ!

உங்கள் ஆத்மா சாந்தியடைய 
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 06-04-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 09-04-2016 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை De Overkant, Newtonstraat 405, 2562 KM Den Haag, Netherlands என்னும் முகவரியில்நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
எமது துயரில் கலந்துகொண்டு தொலைபேசியூடாகவும், நேரில் வந்தும் ஆறுதல் கூறியவர்களுக்கும், உதவிகள் புரிந்தவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
http://www.kallarai.com/ta/remembrance-20160405103251.html

No comments:

Post a Comment