பிறப்பு : 25 சனவரி 1940 — இறப்பு : 9 டிசெம்பர் 2015
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், சவுதி அரேபியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்வராஜா அவர்கள் 09-12-2015 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம், தங்கம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற செல்லத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சிவஞானம், தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வத்சலா அவர்களின் அன்புக் கணவரும்,
றமணன்(வீதி அபிவிருத்தி திணைக்களம்- வடமாகாணம்) அவர்களின் அன்புத் தந்தையும்,
குயிலினி(ஆசிரியை- கொக்குவில் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மாமனாரும்,
இராசதுரை, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சுகிர்தலட்சுமி, அரசகுலசிங்கம், பாலகிருஷ்ணன், சந்திரா, சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பத்மினி, பாலசுப்பிரமணியம், புஷ்பா ஆகியோரின் அன்புச் சகலனும்,
சிவபாலன், சிவறஞ்சினி, ஜீவறஞ்சினி, சிவதாசன், சிவநாதன், கவிதா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தனுயா, தயாபரன், தயாறுவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஜவர்னி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-12-2015 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணி முதல் ந.ப 12:00 மணி வரை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|
No comments:
Post a Comment