பிறப்பு : 25 டிசெம்பர் 1935 — இறப்பு : 26 நவம்பர் 2015
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி அன்னலிங்கம் அவர்கள் 26-11-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், செல்லத்துரை கதிரமலை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அன்னலிங்கம்(யாழ். மேலதிக மாவட்டப் பதிவாளர், முன்னாள்
உடுவில் பிரிவு விவாக, பிறப்பு, இறப்பு பதிவாளர், அகில இலங்கை சமாதான
நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,
செந்தில் குமரேசன்(பிறப்பு, இறப்பு,விவாக பதிவாளர்- உடுவில்), சாந்தினி(லண்டன்), கெளரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, தனலட்சுமி(சறோசா- லண்டன்), மகாலட்சுமி(ராசாத்தி), கெஜலட்சுமி(கெசம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கெளரிதேவி, இலங்கரட்ணம்(தாசன்- லண்டன்), குகசேனன் செட்டியார்(குகன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தையல் நாயகி(கனடா), செல்வலிங்கம், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம்,
சிவபாக்கியம், மற்றும் சிவமணி(கனடா), பூமணி(கனடா) ஆகியோரின் அன்பு
மைத்துனியும்,
நந்ததயாளன், டிலானி, டிலக்ஸி, டிலக்ஷன், சுவாதிகன், சுவாகரன், அபிகீத், அஸ்ணவி, அக்ஷய் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தியோ அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2015 வெள்ளிக்கிழமை அன்று
பி.ப 05:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து
மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
No comments:
Post a Comment