Monday, September 7, 2015

திரு இராதாகிருஸ்ணன் உருத்திராபதி (பிரபல வயலின் கலைஞர், இசைஞானதிலகம், கலாபூசணம்) மரண அறிவித்தல்!

                                      பிறப்பு??                                    இறப்பு : 6 செப்ரெம்பர் 2015


யாழ். இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராதாகிருஸ்ணன் உருத்திராபதி அவர்கள் 06-09-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற உருத்திராபதி, தையலம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கோபாலகிருஸ்ணன், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,
சைந்தவி, ரகுகுலன், திவாகுலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலகிருஸ்ணன், ஸ்ரீரஞ்சனி, கோகுலத்வனி, சந்தானகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிசாகரன்(வலய முகாமையாளர்- யூனியன் வங்கி), லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவகுருநாதன், கலாஈஸ்வரன், சிங்காரவடிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-09-2015 புதன்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி: மஞ்சத்தடி,
இணுவில்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
-- — இலங்கை
தொலைபேசி:+94212241549
http://www.kallarai.com/ta/obituary-20150907211403-print.html
http://www.kallarai.com/ta/obituary-20150907211403.html

No comments:

Post a Comment