Wednesday, August 5, 2015

கார்த்திகாவின் கொலைக் குற்றவாளி யாழைச் சேர்ந்தவர்! மன்னாரில் கைது!



புறக்கோட்டை பெஸ்டியன் வீதி, தனியார் பஸ் நிலையத்தில் அண்மையில் பயணப் பொதியில் சடலமாக மீட்கப்பட்ட கார்த்திகாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்ட்டுள்ளார்.
வவுனியா கோயில் குளம் பிரதேசத்தில் வைத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 
இந்த சந்தேக நபரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் தேடி வந்தமை குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர், சடலத்தை பயணப் பொதியில் இட்டு தூக்கிச்செல்லும் காட்சிகள் சீ.சீ.டி.வி கமராவில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் பொலிஸார் தீவிரமாக சந்தேக நபரைத் தேடினர். மக்களீன் உதவிகளையும் நாடியிருந்தனர்.
இந்நிலையில் இக்கொலை தொடர்பிலான பிரதான சந்தேக நபர் மன்னார் - கோவில்குளம் பகுதியில் வைத்து குற்றத் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
34 வயதான வட்டுக்கோட்டையைச் சோந்த கார்த்திகா என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டிருந்தார்.

No comments:

Post a Comment