Sunday, August 2, 2015

காரை ஏரியில் விட்டுவிட்டு படு கூலாக இருக்கும் டிரைவர்: பயணிகள் நிலை ?

நியூசிலாந்து நாட்டில் உள்ள ஏவியோன் எனப்படும் ஏரியில் காரை குடைசாய விட்டு மிகவும் சாதாரணமாக இருக்கும் இன் நபரின் வீடியோ இன்ரர் நெட்டில் படு வேகமாக பரவி வருகிறது. காரில் சுமார் 3 பயணிகளோடு பயணித்த இவர் திடீரென காரை குடைசாயவிட்டுள்ளார். கார் அப்படியே சென்று ஏரிக்குள் விழுந்து விட்டது. உடனே காரில் இருந்து வெளியே வந்து அதன் மேல் ஏறி உட்கார்ந்தார் ஓட்டுனர். இதேவேளை காரினுள் சிக்கியவர்கள் தம்மை விடுவித்துக் கொண்டு வெளியே வர முயற்ச்சி செய்ய ஆரம்பித்தவேளை, அவர் அங்கே நின்ற பொதுமக்களோடு சாவகாசமாக உரையாடிக்கொண்டு இருந்துள்ளார்.

உள்ளே தன்னோடு பயணித்தவர்களை காப்பாற்றும் எண்ணம் இவருக்கு சற்றும் இல்லை. பின்னர் தீ அணைக்கும் படையினர் மற்றும் பொலிசார் வந்தே பயணிகளை காப்பாற்றியுள்ளார்கள்.
http://www.athirvu.com/newsdetail/4370.html

No comments:

Post a Comment